குவிமந்திரம்

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.  – (திருமந்திரம் – 359)

விளக்கம்:
தேவர்கள் வேள்வித்தீயை மூட்டி, மந்திரங்களை உச்சரித்து தவம் செய்கிறார்கள். மந்திரங்களை உச்சரிப்பதோடு, நாம் நமது அகத்தை உற்று நோக்கி மனத்தை குவித்து தியானம் செய்வதே சிறந்த தவமாகும். இந்த தவமுறையை நாம் படர்கொடி போல் பற்றிக் கொள்ள வேண்டும்.

One thought on “குவிமந்திரம்

Comments are closed.