திருமாலுக்குச் சக்கரம் தந்த சிவபெருமான்

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதம் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலைஅம ராபதி
பார்ப்போக மேழும் படைத்துடை யானே. – (திருமந்திரம் – 367)

விளக்கம்:
திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் நம் சிவபெருமான், பூமி முதலிய ஏழு உலகங்களைப் படைத்தான். அவற்றை நிலை நிறுத்தும் பொருட்டு திருமாலுக்குச் சக்கரம் தந்து அருளினான். இவ்வுலகில் உள்ள தீயவர்கள் அகங்காரத்தோடு தீச்செயல்களைச் செய்தால், திருமால் தனது சக்கராயுதத்தால் அவர்களை அழித்து, இவ்வுலகைக் காப்பான்.