சிவபெருமானின் ஆளும் திறன்

ஆமே ழுலகுற நின்றேம் அண்ணலுந்
தாமே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
நானே அறிந்தேன் அவனாண்மை யாலே. – (திருமந்திரம் – 373)

விளக்கம்:
ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் நம் அண்ணலான சிவபெருமான், ஏழு உலக உயரத்திற்கு அக்னிப் பிழம்பாக ஓங்கி எழுந்து நின்ற போது, பிரமனாலும் திருமாலாலும் நம் பெருமானது திருவடியைக் காண முடியவில்லை. வானுலகிலும் ஏழுலகிலும் பரவி இருக்கும் அந்த நீலகண்டனை நான் அறிந்து கொண்டேன், அவன் என்னை ஆளும் திறத்தினாலே!