அவனைச் சுற்றியே உலகம் இயங்குகிறது

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முங்கண்
டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே. – (திருமந்திரம் – 378)

விளக்கம்:
உலகில் உள்ள யாவற்றிலும் கலந்திருக்கும் பரஞ்சுடராம் நம் சிவபெருமான். இந்த உலகின் படைப்பு யாவையும் தறி போன்று விளங்கும் நம் பரஞ்சுடரைச் சுற்றியே இயங்குகிறது. இந்த இயக்கத்தைப் புரிந்து மெய்ந்நெறி கண்டவர்கள், நம் சிவபெருமானை விடாமல் அவனையே வலம் வருவார்கள்.