சிரசில் சிவனை உணரலாம்

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. – (திருமந்திரம் – 380)

விளக்கம்:
நெடுங்காலம் தியானம் செய்து, அதிலேயே தனது கவனத்தைக் குவிப்பவர்களுக்கு குண்டலினி சக்தி தனது மூலாதார நிலையில் இருந்து வெளிப்படும். அவர்களுடைய குண்டலினி சக்தி, விதிக்கப்பட்டபடி சிரசினை சென்று அடையும். மொத்த உலகிற்கும் ஒரே ஒளியாக நிற்கும் சிவபெருமானை, அவர்கள் தமது சிரசில் உணர்வார்கள்.