அறிவுக்கும் செயலுக்கும் காரணமானவர்கள்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே. – (திருமந்திரம் – 382)

விளக்கம்:
நாதனிடம் இருந்து தோன்றியது நாதம். இந்த மொத்தப் படைப்பும் அவனிடம் இருந்து தோன்றிய நாதம் தான். படைப்புக்களை ஆசை வருத்துகிறது, அதனால் விந்து உருவாகிறது. உருவாகும் விந்துக்களில், தீமை ஏதும் இல்லாத சிவனும் சக்தியும் வந்து அமர்கிறார்கள். அவர்கள் அந்த விந்துக்களில் இருந்து தோன்றப் போகும் உயிர்களுக்கு முறையே அறிவு, செயல் ஆகியவற்றின் காரணமாக அமைகிறார்கள்.