பூவும் வாசனையும்

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே. – (திருமந்திரம் – 387)

விளக்கம்:
புண்ணியனான சிவபெருமான் உலகின் எல்லாவற்றிலும் பொருந்தி இருந்து, எளிய உயிர்களை எல்லாம் வளர்க்கிறான். பூவும் வாசனையும் ஒன்றாகக் கலந்திருப்பதைப் போல, சிவனும் சக்தியும் கலந்திருக்கிறார்கள். சிவனின் செயல்களில் எல்லாம் சக்தியின் பங்களிப்பும் உண்டு.