அனைத்தின் தன்மையாகவும் சக்தி விளங்குகிறாள்

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே. – (திருமந்திரம் – 388)

விளக்கம்:
சிவனின் ஒரு பாகமாக விளங்கும் சக்தி, நீரின் சுவையாக விளங்குகிறாள். எரிகின்ற நெருப்பில் ஒளியாகவும், வீசுகின்ற காற்று தரும் உணர்வாகவும், வான்வெளியில் உள்ள சப்தங்களின் ஒலியாகவும் சக்தியே இருக்கிறாள். நீரினால் சூழப்பட்ட நிலப்பகுதி பல உயிர்களும் தோன்றக் காரணமாக இருக்கிறது. நிலத்தின் அந்தப் பிறப்பு தரும் தன்மையாக விளங்குபவள் சக்தியே ஆவாள்.