எல்லாம் நீயே!

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர்ந் தானே. – (திருமந்திரம் – 391)

விளக்கம்:
இந்த உலகில் நிகழும் அனைத்திற்கும் காரணமானவன் நம் சிவபெருமான். அவன் எல்லாப் படைப்புக்களிலும் அன்பே உருவாய்க் கலந்திருக்கிறான். நாராயணன் செய்யும் காத்தல் தொழிலும், நடுவே சிவபெருமானின் பங்கு உண்டு. பிரமனின் படைத்தல் தொழிலிலும் அவனுடைய பங்கு உண்டு. அவனே வேதமாக இருக்கிறான். இந்த உலகமே நம் சிவபெருமான் தான்.