பிறப்பும் இறப்பும் பரிணாம வளர்ச்சி காண உதவும்

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. – (திருமந்திரம் – 393)

விளக்கம்:
பிறப்பும் இறப்பும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருப்பதால் தான் இந்த உலகம் பரிணாம வளர்ச்சி அடைகிறது. புனிதனான சிவபெருமானின் இந்த உன்னதச் செயலை நாம் உணர்ந்தால், நம் இறைவன் நம் எண்ணங்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்பதையும், எட்டுத்திசைகளில் உள்ள எல்லாவற்றிலும் அவன் கலந்து பரவியிருக்கிறான் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.