என் ஆருயிர் அவன்!

நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. – (திருமந்திரம் – 394)

விளக்கம்:
படைப்பெனும் இயக்கத்திலே நின்று உயிர்களை உருவாக்கும் இறைவன் குற்றம் காணமுடியாதவன். அவன் என் ஆருயுராய் இருக்கிறான். இந்த உடல் உயிரோடு ஒன்றி இருக்க ஒரு தன்மை வேண்டும். அந்தத் தன்மையை உடலுக்குத் தருபவன் அவனே! முன் வினைகளால் துயர் கொடுக்கும் நம் உடலிலும் நடுவாக பொருந்தி இருந்து நம்மை உயிர்ப்போடு வைத்திருந்து துணையாக இருக்கிறான்.