மனோன்மணி மங்கலி!

வாரணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. – (திருமந்திரம் – 402)

விளக்கம்:
கச்சினை அணிந்த கொங்கைகளை உடைய மனோன்மணி மங்கலமானவள். உலகில் அனைத்துக் காரியங்களுக்கும் அவளே காரணமாக இருக்கிறாள். அந்தக் காரியங்களில் கலந்தும் இருக்கிறாள். அவளே வேதப்பொருளாக இருக்கிறாள். வானவர்களும் மயங்கும் மாயையாக இருக்கிறாள். முழுமையான சக்தி கொண்ட அவள் நம் அறிவினில் ஞானமாக விளங்குகிறாள்.