நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. – (திருமந்திரம் – 403)

விளக்கம்:
தானாய் நின்று நிறைந்தவன் மகேசுரன். அவனது ஆணைக்கிணங்க சென்று இயங்கும் உருத்திரன், திருமால், வாசனை நிறைந்த தாமரை மலரில் வசிக்கும் பிரமன் ஆகியோரின் செயல்களிலெல்லாம் மகேசுரன் பொருந்தி இருக்கிறான்.