எல்லாமாய் இருப்பவன் ஒருவனே!

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. – (திருமந்திரம் – 404)

விளக்கம்:
ஏழு உலகங்களையும் படைத்தவன் ஆதிக்கடவுளான சிவபெருமான் ஆவான். தான் படைத்த உலகங்களைக் காப்பவனும் அவனே. உலகின் அனைத்து உயிர்களையும் அழிப்பவனும் மறுபடியும் படைப்பவனும் அவனே! அவனே உலகமாகவும் உள்ளான். அவனே உலகில் வாழும் உயிர்களாகவும் உள்ளான்.