எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை!

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே. – (திருமந்திரம் – 406)

விளக்கம்:
நம் உடலும் உயிரும் இசைந்திருக்க ஒரு தன்மை தேவை. அந்தத் தன்மையைக் கொடுக்கும் நந்தியம்பெருமானை நாம் எட்டுத் திசைகளிலும் தேடுகிறோம். நம் பெருமான் நம் மனத்துள்ளே தான் வசிக்கிறான். வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நம் மனத்துள் வசிக்கும் பெருமானை நோக்கி அக வழிபாடு செய்வதை நாம் வழக்கமாகக் கொள்வோம்.