எங்கள் அண்ணல்!

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவெளி அண்ணல் நின்றானே.   – (திருமந்திரம் – 413)

விளக்கம்:
உடலாகவும், உயிராகவும், உலகமாகவும் தானே உள்ளான் சிவபெருமான். அவனே கடலாகவும், மேகமாகவும், மழையாகவும் விளங்குபவன். எங்கும் குறைவில்லாமல் உட்பொருளாய் இருப்பவன் அவனே. அவன் நம்மால் அடைய முடியாத பெருவெளியில் இருக்கிறான்.