அன்பும் அவனே! அறிவும் அவனே!

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.   – (திருமந்திரம் – 416)

விளக்கம்:
ஐம்பூதங்களின் ஐந்து தொழில்களிலும் அன்புடன் இணைந்திருக்கும் நம் சிவபெருமான் அன்பாகவும், அறிவாகவும், அடக்கமாகவும் இருக்கிறான். நமது இன்பங்களில் எல்லாம் அவனே இருக்கிறான். இன்பக்கலவியிலும்  அவன் இருக்கிறான். காலத்தை வகுத்தவன் அவனே. காலத்தை இறுதி செய்பனும் அவனே!