நாமெல்லாம் எந்திரர்கள்!

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.   – (திருமந்திரம் – 433)

விளக்கம்:
உருத்திரன், திருமால், இன்பப் பிறவிக்கான உடலைப் படைக்கும் பிரமன் ஆகியோருடன் சேர்ந்து, நமது சிவபெருமான் அருமையான ஒரு எந்திரமாக நம்மை படைத்திருக்கிறான். இதை நாம் உணரவே செய்கிறோம். ஆனால் இந்த எந்திரத்துக்குள், அவன் தன்னை ஒளித்து வைத்திருக்கிறான். அந்தப் பரிசை நாம் அறிந்து கொள்வதில்லை.