உயிரை உடலோடு கட்டுவான், பின்பு அவிழ்ப்பான்

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண்ணுதல் காணுமே.   – (திருமந்திரம் – 441)

விளக்கம்:
எட்டுத்திசையும் வீசுகின்ற காற்றோடு, வட்ட வடிவமாய் உள்ள கடல் நீர், அக்னி, நிலம், வானம் ஆகியவற்றைச் சேர்த்து ஐம்பூதங்களால் நம் உயிரையும் உடலையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பவன், நெற்றிக்கண்ணை உடைய நம் சிவபெருமான் ஆவான். கட்டிய உயிரையும் உடலையும் அவிழ்ப்பவனும் அவனே!