நம் சிந்தையை உச்சியில் நிறுத்துவோம்!

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.   – (திருமந்திரம் – 442)

விளக்கம்:
நமது உச்சந்தலைக்கு மேல் விளங்கும் ஒளி மிகுந்த நாதத்தை விரும்பித் தியானித்திருந்தால், நமக்கு இறப்பு என்பதே கிடையாது. (அதாவது நம்முடைய இறப்பு மற்றவர்களுடையது போல் துன்பம் மிகுந்ததாக இருக்காது). அனைத்தையும் விஞ்சும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களைத் தைத்து, இந்த உலகில் உயிர்களை எல்லாம் படைக்கிறான், எல்லாம் வல்ல நம் சிவபெருமான்.