அனைத்துக்கும் ஆதாரமானவன்!

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.  – (திருமந்திரம் – 447)

விளக்கம்:
முதன்மையானவன் ஆன சிவபெருமானே இந்த உலகின் ஆதாரமான ஐந்து பூதங்களைப் படைத்தான். அவனே பல யுகங்களைப் படைத்து அருள் செய்தான். எண்ணில்லாத தேவர்களைப் படைத்தவன் நம் சிவபெருமானே! அவன் தான் படைத்த அனைத்தையும் அருள் செய்து காக்கின்றான்.