மிக அகலமானவன்!

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.  – (திருமந்திரம் – 448)

விளக்கம்:
சிவபெருமான் ஏழு உலகங்களையும் தனக்குள் அடங்கி இருக்கச் செய்கின்றவன். அவ்வளவு அகலமான உருவத்தை உடையவன் அவன். இவன் தான் கடவுள் என எளிதில் சுட்டிக் காட்ட முடியாத அரியவன் அவன்! அவனே இந்த உலகில் எல்லா உயிர்களிலும் கலந்திருக்கிறான். உலகின் ஒரே நம்பத் தகுந்தவனான நம் சிவபெருமான் நமக்களிக்கும் உபதேசத்தைக் கேட்டுப் பயன் பெறுவோம்.