பேதைப் புலன்கள்!

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே.  – (திருமந்திரம் – 466)

விளக்கம்:
பிண்டமெனும் இந்த உடலில் தோன்றும் அறியாமை கொண்ட ஐந்து புலன்களும், இறுதியில் இந்த உடலிலேயே அழிகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிரும் அவ்வாறே! இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிர்கள் இங்கேயே அழிகின்றன. இதெல்லாம் தெரிந்து தான் உயிர்கள் விந்துவில் தோன்றிப் பிறக்கின்றன.

One thought on “பேதைப் புலன்கள்!

Comments are closed.