நாம் சந்திக்கும் ஆறு விதமான துன்பங்கள்!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே.  – (திருமந்திரம் – 469)

விளக்கம்:
நம்முடைய உடல் ஆறு விதமான துன்பங்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் அறிவதில்லை. நம்முள்ளே பெருகும் தாமச, ராசத, சாத்துவீக குணங்களை விட்டு நாம் பிரிவதில்லை. நமக்குக் கிடைத்துள்ள எட்டு சித்திகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில்லை, அவற்றில் நமது மனத்தை செலுத்துவதும் இல்லை. பத்து மாதங்கள் கருவில் இருந்து தோன்றிய பிண்டங்களாகிய நாம் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறு துன்பங்கள் – பேறு, இழவு, துன்பம், பிணி, மூப்பு, சாக்காடு.  எட்டு சித்திகள் – அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம்.