உடலும் உயிரும் மட்டுமில்லை! இன்னொன்று இருக்கிறது!

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.  – (திருமந்திரம் – 470)

விளக்கம்:
நமக்கு உடல் அமைத்துக் கொடுத்தது போலவே, அதில் உயிர் வைத்தது போலவே, உடல் சரியாக இயங்க ஒன்பது வாசல்களை வைத்தது போலவே, உறுதி கொண்ட நமது சிரசின் மேலே ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையின் உச்சியில் குண்டலினி என்னும் அக்னியை வைத்திருக்கிறான் ஈசன். சகசிரதளமான நமது சிரசின் உச்சியில் இருக்கும் அந்த ஈசனை, தியானத்தினால் கண்டடைந்து அவனுடன் கலந்திருந்தேனே!

நாம் உடலும் உயிருமாய் மட்டும் ஆனவர்கள் இல்லை. நமக்குள்ளே ஒரு அக்னி இருக்கிறது. அதை உணர்ந்தால், நாம் ஈசனை உணரலாம்.