நுண்ணுடலைக் கட்டுவதும் அவிழ்ப்பதும் அவனே!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.  – (திருமந்திரம் – 473)

விளக்கம்:
நம்முடைய பருவுடலின் கருவிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை செயல்பட, நுண்ணுடலின் கருவிகளான மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது. நுண்ணுடலின் துணை இல்லாமல் பருவுடல் இயங்காது. இந்த உலகத்தின் மீது உள்ள பற்றுதலால் பிறப்பெடுத்துள்ள நம் உடலில் நுண்ணுடம்புக் கருவிகளைக் கட்டுவதும், நம்முடைய வாழ்நாளின் முடிவில் அவற்றை அவிழ்ப்பதும் சிவபெருமானே! இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.