குழந்தையின் ஆயுள் சிறக்க …

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.  – (திருமந்திரம் – 479)

விளக்கம்:
கூடலின் போது, ஆணின் விந்து ஐந்து விரற்கடை அளவு பாய்ந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் நூறு வருடங்களாகும். நான்கு விரற்கடை அளவு பாய்ந்தால் பிறக்கும் குழந்தையின் ஆயுள் எண்பது வருடங்களாகும். யோகிகளுக்கு இந்தக் கணக்கு தெரியும். கூடலின் போது மூச்சைக் கட்டுப்படுத்தி, விந்து அதிக தூரத்துக்கு பாயச் செய்யும் முறை அவர்களுக்குத் தெரியும். நாமும் யோக வழியில் நின்றால், இந்த மூச்சுக் கணக்கை அறியலாம்.