கலவியின் போது மூச்சு இயங்கும் முறை!

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே.  – (திருமந்திரம் – 483)

விளக்கம்:
கூடலின் போது ஆணின் மூச்சு இயங்கும் முறையே பிறக்கும் குழந்தையின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது என்று முந்தைய பாடல்களில் பார்த்தோம். அக்கூடலின் போது பெண்ணின் மூச்சும் ஆணின் மூச்சோடு ஒத்து இயங்க வேண்டும். அப்படி ஒத்து இயங்கினால், பிறக்கும் குழந்தை அழகாக இருக்கும். கலவியின் போது இருவருக்கும் மூச்சு தடுமாறினால், திரண்ட வளைகரத்தைக் கொண்ட அப்பெண்ணுக்கு வயிற்றில் கரு தங்காது.