வயிற்றில் உள்ள குழந்தை சோதியைப் போன்றது!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.  – (திருமந்திரம் – 484)

விளக்கம்:
திரண்ட வளைகரத்தைக் கொண்டப் பெண்ணின் வயிற்றில் உதிக்கும் குழந்தை, நம்முடைய யோக நிலையில், அண்ணாக்கில் அசையும் சோதியைப் போன்று ஒளிமயமானது. அக்குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தாயின் வயிற்றில் சூரியனைப் போன்ற செந்நிறம் கொண்டதாக வளர்ந்து உருவம் பெறுகிறது.