பழமையான சிவபெருமானை நாடுவோம்

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலு மாமே.  – (திருமந்திரம் – 487)

விளக்கம்:
ஆணும் பெண்ணும் இன்பத்தை நாடிக் கூடுகிறார்கள். அதன் விளைவாக துன்பம் நிறைந்த பாசத்தில் ஒரு புதிய உயிர் தோன்றி இந்த மண்ணில் பிறக்கிறது. பிறந்த அந்தக் குழந்தை வளரும் போது, சிவபெருமானை நாடி அவனைத் துதித்து தனது பற்றுக்களில் இருந்து விடுபட வேண்டும். நம் சிவபெருமான், இந்த நிலமெல்லாம் தோன்றுவதற்கு முன்பே உள்ள பழமையானவன். அவனால் மட்டுமே நம்மை நமது துன்பங்களில் இருந்து விடுவிக்க முடியும்.