தாயின் பெருமை

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.  – (திருமந்திரம் – 488)

விளக்கம்:
நாமெல்லாம் சிவபெருமானின் குழந்தைகள். குயில் தனது முட்டையை காக்கையின் கூட்டில் வைத்து விடுகிறது. காக்கையும் எந்தவிதச் சந்தேகமும் இல்லாமல் அந்த முட்டையை அடைகாத்து வளர்த்து விடுகிறது. அதே போல் சிவபெருமானும் தனது குழந்தையான நம்மை நமது தாயின் வயிற்றில் விட்டு வளரச் செய்கிறான். நமது தாயும் நம்மைத் தன்னுடைய குழந்தையாகவே நினைத்து மனச்சோர்வு இல்லாமல், தனது உடலுக்கு அதிக அசைவு கொடுக்காமல் ஜாக்கிராதையாக வளர்க்கிறாள்.