சிவபெருமானுக்கு இன்பம் தரும் விஷயம்

முதற்கிழங் காய்முளை யாயம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாயின்ப மாவதுபோல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.  – (திருமந்திரம் – 489)

விளக்கம்:
செடி ஒன்று முதலில் மண்ணின் கீழ் கிழங்காக இருக்கிறது. அது முளைத்துப் பின் புதர் போல் வளர்கிறது. வளர்ந்த பருவத்தில் அது பழங்களைக் கொடுக்கிறது. இது போன்ற சரியான வளர்ச்சியே அந்தத் தாவரத்துக்குக் கிடைக்கும் இன்பமாகும். நம்முடைய வளர்ச்சியும் சரியான பாதையில் சென்று, நாம் ஆன்மிகத்தால் பக்குவம் பெறுவதே நமக்குள் இருக்கும் சிவபெருமானுக்கு இன்பம் தருவதாகும்.