தவத்தால் உணரலாம்

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
ஊனே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினி னுள்ளே.  – (திருமந்திரம் – 490)

விளக்கம்:
இந்த உலகில் எல்லோரையும் விட பெருமை கொண்டவன் சிவபெருமான். அப்படிப்பட்ட பெருமை கொண்டவன், சிறுமை நிறைந்த நம் உடலில் கலந்து வசிக்கிறான். தேவர்களாலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அந்த சிவபெருமானை, நாம் நம்முடைய உள் நோக்கிய தியானத்தால் அறிந்து கொள்ளலாம்.