மூவகைச் சீவ வர்க்கம்

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.  – (திருமந்திரம் – 493)

விளக்கம்:
மனிதர்களை விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகையாக பிரிக்கலாம். தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானகலர் ஆணவம் உடையவர். ஊழி காலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவத்தையும் கன்மத்தையும் உடையவர்கள். உலக வாழ்வில் சிக்கி அறியாமை நிரம்பப் பெற்றவர் சகலர். சகலர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய முன்றையும் உடையவர் ஆவார். விஞ்ஞானகலரை நான்கு வகையாகவும், பிரளயாகலரை மூன்று வகையாகவும், சகலரை முன்று வகையாகவும் பிரிக்கலாம். இந்த உட்பிரிவுகளைச் சேர்த்தால் மனிதர்கள் பத்து வகையினர் ஆவர்.