பிரளயாகலர்

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.  – (திருமந்திரம் – 495)

விளக்கம்:
ஊழிகாலத்தில் ஞானம் அடையக்கூடிய பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை விடாதவர்கள். அவர்கள் தமது அடுத்த பிறவியில் முக்தி அடைவார்கள். இரண்டாவதாக வரும் பிரளயாகலரை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். அவர்கள் நூற்றெட்டு பேராக இருக்கும் உருத்திரரின் நிலையை அடைவார்கள். இவர்களுக்கு அடுத்த வகையினரான சகலர் மும்மலங்களையும் உடையவர்கள்.