எல்லோருக்கும் கண்டிப்பாக முத்தி உண்டு!

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.  – (திருமந்திரம் – 499)

விளக்கம்:
விஞ்ஞானகலர் தம்முடைய நல்வினைகளால் உடலும் மனமும் ஒருமித்து சிவபெருமானை தியானித்து முத்தி அடைவார்கள். பிரளயாகலர் தம்முடைய நல்வினைகளால் அடுத்து இன்னும் மேன்மையான பிறவி பெற்று முத்திக்கான முயற்சியில் இருப்பார்கள். சகலர் மறுபடியும் நிறைய பிறவிகள் எடுத்தாலும் இடையிடையே முத்திக்கான முயற்சியை செய்தவாறு இருப்பார்கள். அவர்களும் ஒரு நாள் மெய்ஞானம் பெற்று சிவத்தை அடைவது உறுதி. இதில் சந்தேகம் வேண்டாம்.