சூரபதுமனை அழிக்க ஆறுமுகனை அனுப்பிய சிவபெருமான்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.   – (திருமந்திரம் – 520)

விளக்கம்:
ஒருமுறை சூரபதுமன் எனும் அசுரன், தனது வலிமையைத் தவறாக உபயோகித்து, தேவர்களை எல்லாம் துன்புறுத்தினான். எப்போதும் மணம் வீசும் இயல்புடைய தேவர்கள், துன்பம் தாளாது சிவபெருமானிடம் சென்று  முறையிட்டார்கள். தற்பரனாக விளங்கும் சிவபெருமான் அழகிய பவழம் போன்ற மேனியைக் கொண்ட ஆறுமுகனை அழைத்து, தேவர்களுக்குப் பகையாக விளங்கும் சூரபதுமனை அழிக்க உத்தரவிட்டான்.