காமமும் சிவநிந்தனையே!

போகமும் மாதர் புலவி அதுநினைந்து
ஆகமும் உள்கலந்து அங்குஉள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.  –  (திருமந்திரம் – 529)

விளக்கம்:
எல்லாம் ஈசனே நினைத்து ஒழுக்க நெறியில் நில்லாமல், பெண் சுகத்தையே நினைத்து அதிலேயே மூழ்கியவாறு உள்ளோம். வேதம் உரைக்கும் வேதியர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். பெண் சுகத்தை நினைத்து ஈசனை மறப்பதும் சிவநிந்தனையே ஆகும்.