குருநிந்தனை கூடாது!

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  –  (திருமந்திரம் – 530)

விளக்கம்:
ஞானம் பெற்ற உயர்ந்த சிந்தனை கொண்டவகளை குருவாக ஏற்று வணங்க வேண்டும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை மதிக்காதவர்கள் கீழ் மக்கள் ஆவார்கள். இவர்கள் உடன் இருப்பவரையும் மனம் நோகும்படி பேசி வருந்தும்படிச் செய்வார்கள். கற்று அறிந்தவரைத் தேடிச் சென்று, அவரைச் சார்ந்து இருந்து அவரிடம் இருந்து ஞானம் பெறுபவர் அடையும் பயன் அளவில்லாதது.