சிவனடியார்க்கு தீமை செய்யக்கூடாது

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. –  (திருமந்திரம் – 534)

விளக்கம்:
சிவனடியார்கள் மனம் கலங்கும்படியான நிலை ஒரு நாட்டில் ஏற்படக்கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாடும் அந்நாட்டின் சிறப்பும் அழிந்திடும். இந்திரனின் ஆட்சிப் பீடமும், நாட்டின் மன்னரின் ஆட்சிப் பீடமும் நாசமாகும். இது நம் நந்தியம்பெருமானின் ஆணை!