வசித்துவம் – எட்டாம் சித்தி

குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.  –  (திருமந்திரம் – 642)

விளக்கம்:
யோககுருவின் வழிகாட்டுதலின் படி நாம் தியானம் செய்வோம். அத்தியானத்தினால் மூலாதாரத்தில் உள்ள சக்தி சகஸ்ரதளத்தில் இருக்கும் சிவனைச் சேரும். அந்தச் சரியான சமயத்தில் தெளிவு தரும் சாம்பவி, கேசரி ஆகிய யோகங்களைச் செய்பவர்களுக்கு எட்டாம் சித்தியான வசித்துவம் வாய்க்கும். இதை விடச் சிறந்த சிவகதி ஏது?

குரவன் – குரு, பரை – பராசக்தி, சங்கட்டம் – நல்ல சமயம்