பூரண சக்தியில் சிவன் கலந்திருப்பான்

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. – (திருமந்திரம் – 663)

விளக்கம்:
தியானத்தின் போது பூரண சக்தியானது இருபத்தோர் கூறுகளாகப் பெருகுகிறது. ஒவ்வொரு பங்கிலும் தங்கியிருக்கும் சக்தியானது எழுநூற்று அஞ்சு மடங்காகப் பெருகுகிறது. நாராயணன், பிரமன் முதலிய ஐவருக்கும் தலைவனான சிவபெருமான் சக்தியின் அனைத்துக் கூறுகளிலும் கலந்து விரிந்து இருக்கிறான்.


Also published on Medium.