மிடைவளர் மின்கொடி!

இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறேழுந் தண்சுட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே. – (திருமந்திரம் – 665)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடகலை, பிங்கலை வழியாக நாம் மூச்சை முறைப்படுத்தும் போது, நமது மூச்சின் ஓட்டம் சாந்தப்படும். மின்கொடியாகிய குண்டலினி தடை தகர்ந்து மேல் எழும். நம்முள்ளே ஒரு குளிர்ந்த ஒளி தோன்றும். அவ்வொளியில் நம் மனத்துக்கு நெருக்கமாக குண்டலினி வளர, நம் மனமும் யோகத்தில் ஒடுங்கி அமைதி பெறும்.


Also published on Medium.