சிவனை மடக்கலாம்! வசப்படுத்தலாம்!

ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கில்
மடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே. – (திருமந்திரம் – 666)

விளக்கம்:
புலன்கள் ஒடுங்கி பிராணாயாமத்தில் மனம் ஒருமைப்பட்டு இருந்தால் மூச்சுக்காற்றின் போக்கு மடங்கி அடங்கி நம் வசப்படும். பிராணாயாமத்திலேயே மனம் லயித்திருந்தால், நடங்கொண்ட கூத்தனான சிவபெருமானும் நம்மை நாடி வருவான். வந்து நம் உயிரோடு மடங்கிக்  கலந்திடுவான்.


Also published on Medium.