அட்டாங்க யோகத்தால் அமுதம் பெறலாம்

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே. – (திருமந்திரம் – 669)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று, வசப்படுத்தக் கடினமான மூச்சுக்காற்றை வசப்படுத்தி மூச்சுப்பயிற்சி செய்தால் அட்டமாசித்திகளைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியின் போது, சுழுமுனையை நமக்கு இணக்கமாகச் செய்வோம். சுழுமுனை நமக்கு இணக்கமானால், குண்டலினியை தலை உச்சிக்கு ஏற்றி அங்கே ஊறும் அமுதத்தை ருசிக்கலாம்.


Also published on Medium.