அமிர்தம் நம்முள்ளேயே இருக்கிறது!

மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே. – (திருமந்திரம் – 672)

விளக்கம்:
தேவர்கள் மந்தர மலையை மத்தாகக் கொண்டு கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தது போல, நாமும் குழியில் நட்ட தூண் போல நிமிர்ந்த நிலையில் அமர்ந்து சூரிய கலையிலும் சந்திர கலையிலும் கவனம் செலுத்தி, பிராணாயாமத்தைச் சரியாகச் செய்து வந்தால் நம்முள்ளே அமிர்தம் ஊறும். அது மட்டுமில்லாமல் நாம் விரும்பியவாறு சிவலோகத்தில் வசிக்கலாம். அவ்வுலகத்தில் அணிமா முதலான அட்டமாசித்திகளைப் பெறலாம்.


Also published on Medium.