அணிமா – பஞ்சு போன்ற மனம் பெறலாம்!

முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே. – (திருமந்திரம் – 673)

விளக்கம்:
யோகப்பயிற்சியில் நின்று, மேலே ஏற்றிய குண்டலினியை கீழே இறங்காமல் ஒரே இடத்தில் முடிந்து வைத்து, அதிலேயே ஒரு வருடம் லயித்திருந்தால் அணிமா என்னும் சித்தி கைகூடும். நாமும் குழப்பம் தணிந்து, பஞ்சை விட மெல்லிய மனம் பெறுவோம். காற்றாய் மெலிந்த நம் மனத்தை யாராலும் வெல்ல முடியாது.


Also published on Medium.