இலகிமா என்னும் சித்தி பெறும் வழி!

ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகல தாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே. – (திருமந்திரம் – 674)

விளக்கம்:
நம்முடைய வாழ்நாளெல்லாம் வீணாகச் சாகின்றன. இப்படி வீணாகும் காலத்தில் நாம் தியான வழியில் நின்று, தனி நாயகியான குண்டலினிச் சக்தியைச் சேர்ந்திருப்போம். ஐந்தாண்டுகள் இப்படி நாம் தொடர்ந்து அட்டாங்க யோகத்தில் நின்றிருந்தால், இலகிமா என்னும் சித்தி பெறலாம். இலகிமா என்னும் மென்மையான தன்மையை அடைந்தால் நாம் அனைத்து தத்துவங்களிலும் புகுந்து வரலாம். அதாவது அனைத்துத் தத்துவங்களையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.


Also published on Medium.