மென்மையிலும் மென்மையான ஒளி!

மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே. – (திருமந்திரம் – 675)

விளக்கம்:
அட்டாங்க யோகத்தில் நின்று, இலகிமா என்னும் சித்தி பெற்று, மென்மையிலும் மென்மையான சிவபெருமானைக் காணலாம். சிவபெருமானைக் கண்டபின் நாமும் மென்மையான ஒளியாகலாம், சிவ ஒளியோடு கலந்திருக்கலாம். சிவ ஒளி பரந்து எங்கும் விரிந்திருப்பதை அப்போது உணரலாம். அனைத்துக்கும் மேலான ஒளியாகிய மெய்ப்பொருளை அறிந்து கொள்லாளாம்.


Also published on Medium.