மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாள்!

மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே. – (திருமந்திரம் – 676)

விளக்கம்:
மெய்ப்பொருளை உணர்த்தும் குண்டலினிச் சக்தியின் துணை கொண்டு இலகிமா என்னும் சித்தி பெறுவதைப் பற்றிப் பார்த்தோம். இலகிமா என்னும் மென்மை பெற்று, தொடர்ந்து ஒரு வருடம் தியானத்தில் லயித்திருந்தால், சிவதத்துவம் பற்றிய ஞானம் கைகூடும். மறைபொருளாகிய அத்தத்துவத்தை உணர்வதே மகிமா என்னும் சித்தி ஆகும்.


Also published on Medium.